உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!!

391

 
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 – இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள்.

ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிவிடலாம். மிக மிக நவீன கட்டுப்பாட்டு நுட்பங்களையும், பாதுகாப்பையும் இந்த விமானம் பயணிகளுக்கு வழங்குகிறது.

விமானத்தில் பயணிகள் ஏறுவது, இறங்குவது தெரியாத அளவுக்கு மிகச்சிறப்பாக படிக்கட்டுகள் மற்றும் எஸ்ட்லேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விமானத்தில் இருக்கும்போதும், நடக்கும்போது நமது வீட்டுக்குள் நாம் இருப்பது போன்ற உணர்வினை தருகிறது.

இதுவரை உருவாக்கப்பட்ட பயணிகள் விமானங்களில் அதிர்வுகளும், சப்தமும் குறைவான விமான மொடலாகவும் ஏர்பஸ் ஏ380 வர்ணிக்கப்படுகிறது.

மிகச் சிறப்பான காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இந்த விமானம் பெற்றிருக்கிறது. சிறிய விமானங்கள் டர்புலென்ஸ் (Turbulence) எனப்படும் காற்று வெற்றிடங்களை கடக்கும்போது அதிக அதிர்வுகள், குலுங்கல்களை சந்திக்கும்.

ஆனால், இந்த விமானம் டர்புலென்ஸ் (Turbulence) காரணமாக அதிக பாதிப்பை சந்திக்காது. இந்த விமானத்தின் suite அறை நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளை வைத்தே இந்த விமானம இயக்கப்படுகிறது.