வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று (25.11.2017) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.எ.மோகன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பான்ட் வாத்தியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், குழு இசை, சிங்களப்பாடல், பின்னல் கோலாட்டம் , ஆங்கிலப்பாட்டு , பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய, மீன்பிடி அமைச்சர் க.சிவநேசன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் இ.இந்திரராஜா, ஜீ.ரி.லிங்கநாதன் , கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் எம்.இராதாகிருஷ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் , வவுனியா தெற்கு ஆரம்பக்கல்விப் பணிப்பாளர் ஆ.தேவசேனா, பிரதிநிதிகளாக அயல் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











































