மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை!!

769

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருத்துறைப்பூண்டியை அடுத்த அம்மலூர் கிராமத்தில் கணேசன் என்பவர் மனைவி ராசாத்தி மகள் கீதா மற்றும் மகன் ஹரிஹரசுதனுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு மணமகன் வீட்டார் கணேசனிடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். பின்னர் மகன் ஹரிஹரசுதனை, தனது வீட்டிற்கு எதிரே உள்ள மற்றொரு வீட்டில் படுக்க வைத்த கணேசன், மனைவி, மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் ஹரிஹரசுதன் வீட்டுக்கு வந்து பார்த்த போது மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்து சென்ற பொலிசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.