வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வு இன்று (27.11.2017) மாலை 6.05 மணிக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.
மாவீரர் லெப்டினன் நா.தயாபரனின் தாயார் நாகேந்திரன் பரமேஸ்வரி ஈகைச் சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மாவீரர்களை நினைவுகூறும் இந்நாளில் வவுனியா குடியிருப்பில் நான்கு மாவீரர் குடும்பங்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கையில் தீபங்களை ஏற்றியிருந்ததுடன் மாவீர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றியதை தொடர்ந்து மாவீரர் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்வின் இறுதியில் நான்கு மாவீரர் குடும்பங்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் தென்னங்கன்று உட்பட உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.