வவுனியாவில் திடீரென பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!!

959

 
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (27.11.2017) இரவு 8.50 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிலை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பிய சமயத்தில் மோட்டார் சைக்கில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

உடனடியாக அயலவரின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் நெளுக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க மோட்டார் சைக்கில் தீப்பற்றியமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.