வவுனியாவில் ஈரோஸ் அமைப்பின் மாவீரர் நாள் நிகழ்வு!!

370

 
வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுப் பூங்காவில் மாவீர் தின அஞ்சலி நிகழ்வு நேற்று (27.11.2017) நடைபெற்றது.

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அருளப்பு இராஜநாயகம் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் தம்பிராசா சுபாசினி (தமிழ்மொழி) மாவீரர் தம்பிராசா சத்தியகுமாரி (தமிழழகி) ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரருக்கான நினைவு சுடர் அவர்களின் நினைவிடத்தில் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்நிகழ்வில் மாவீரர் குடும்பத்தை சேந்தவர்கள் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.