88 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து தண்டனை : பாடசாலை ஆசிரியர்கள் வெறிச்செயல்!!

582

 

இந்திய மாநிலம் அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசல பிரதேசத்தின் இட்டா நகரில் செயல்பட்டு வரும் குறித்த பள்ளியில் மாணவிகள் செய்த சிறிய தவறு ஒன்றிற்காக இந்த கொடூரமான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை மூன்று ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவிகளுக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இட்டா நகரில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி பாலிக்க வித்தியாலயா என்ற அந்த புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் 8 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகள் 88 பேருக்கு மிகவும் மோசமான இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் அனைவரும் மற்ற பள்ளி மாணவிகள் முன்னிலையில் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். குறித்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை பற்றியும், அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றியும் தவறாக ஊமை கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதம் 7ம் வகுப்பிற்கும், 8ம் வகுப்பிற்கும் இடையில் தரையில் கிடந்துள்ளது. இதை எழுதியது யார் என்று தெரியாததால் இரண்டு வகுப்பிலும் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் சேர்த்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் யாரும் வெளியில் வாய் திறக்க கூடாது என்றும் தண்டனை வழங்கிய ஆசிரியர்கள் மூவரும் மாணவிகளை எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த 88 மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அருணாசல பிரதேச பள்ளி கல்வித்துறையிடம் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான புகார் இட்டா நகர் காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆசிரியர்கள் மீது தற்போது வழக்கும் பதியப்பட்டு இருக்கிறது.

இன்று மாலைக்குள் அந்த மூன்று பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று இட்டா நகர் பகுதியின் உதவி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அருணாசல மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.