வவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி!!

465

 
உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ம் திகதி உலக ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (01.12.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் , சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமான வாகன விழிப்புணர்வு பேரணியானது,

மன்னார் வீதியூடாக வந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்து, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வரை சென்று மீண்டும் அதே பாதையுடாக வவுனியா மணிக்கூட்டு சந்தியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக ஹேரவப்பொத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை வந்தடைந்தது.

2001 இல் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோர் எண்ணிக்கை 7500 ஆக இருந்தபோதும் 2011 இல் 2800 ஆக குறைந்துள்ளது. இதனால் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோரைக் கொண்ட 162 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.