சுமார் 300 ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற விஷால்!!

1044

சுமார் 300 ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார் நடிகர் விஷால். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகின்றார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் வெற்றிடமாகவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க, நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே 7 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

திடீரென அரசியலில் குதித்துள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் 300 ஆதரவாளர்கள் புடைசூழ மோட்டார் சைக்கிளில் தண்டையார் பேட்டை அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.