உயிருடன் எரித்துக் கொல்லப்படும் முன் என்னிடம் பேசினார் : மனைவியின் உருக்கமான பேட்டி!!

271

ராஜஸ்தானில் முகமது அப்ரசல் என்பவர் லவ் ஜிஹாத் என்ற பெயரில் உயிருடன் எரித்துக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி உருக்கமான பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய கணவர் அப்போது தான் போன் செய்து பேசினார், 50000 பணத்தை உனக்கு அனுப்புகிறேன். அதை வைத்து கடனை அடை, வங்கிக்கு சென்று பார் பணம் வந்துவிட்டதா என்று கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் வங்கிக்கு சென்று இரண்டு மணிநேரமாக காத்திருந்துள்ளார், போனும் ஓப் செய்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. பின்னர் தான் அவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள், வறுமையால் ஒரு மகள் வேலைக்கு செல்கிறாள், அவருக்கு அப்படி ஒரு எண்ணமே வந்திருக்காது, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.