வவுனியா காத்தார் சின்னக்குளத்தில் போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித் திட்டம்!!

345

 
காத்தார் சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் , சகவாழ்வுச்சங்கம், கிராம அலுவலரின் ஒழுக்கமைப்பின் கீழ் போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (10.12.2017) காலை 9 மணிக்கு காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அண்ணாநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப்பீட அதிகாரிகள், சமுதாய பொலிஸ் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மகாறம்பைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, மகாறம்பைக்குளம் கிராம அலுவலர், கிராமிய அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என 100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய வவுனியா பொலிஸ் தலைமைப்பீட அதிகாரி போதைப்பொருள் அற்ற இலங்கையை உருவாக்க அனைவரும் அயராது பாடுபட வேண்டும் எனவும் இது சம்பந்தமாக ‎0718591343 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.