வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்!!

255

 
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (10.12.2017) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் 290வது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில், இன்றைய போராட்டத்தின்போது, தமது பிள்ளைகளை காணாது தாம் தவித்து வரும் நிலையில் இதுதானா மனித உரிமை என அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதேவேளை தமது போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், தொடர்ச்சியாக எமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.