வவுனியா பொதி அனுப்பும் நிறுவனத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகள்!!

587

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பிரபல பொதிகள் அனுப்பும் நிலையத்திற்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து வெளிநாடுகளிலுள்ள உறவினருக்கு அனுப்பும் பொருட்கள் அங்கு சென்று சேரவில்லை என ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பொதி அனுப்பும் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பப்படும் பொருட்களுக்கு 17ஆயிரம் ரூபா செலவிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும் அப் பொருட்கள் உறவினர்களுக்குச் செல்லவில்லை எனவும் பொதி அனுப்பும் நிலையத்தில் கேட்டால் உங்களுடைய உறவினருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்து வருகின்றனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பொதி அனுப்பும் ஒரு கடைக்கே ஏழு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் இம் முறைப்பாடு தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.