கேரள மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

328

 
கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா, கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த வழக்கில் அசாமைச் சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்ற 23 வயது இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

கொச்சி நீதிமன்றத்தில் 18 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமீருல் இஸ்லாம்தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.