கணவன்- மனைவி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

486

தமிழ்நாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவியின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

சேலம் குகை நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், துணி வியாபாரியான இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் தாய்லாந்திலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மூத்த மகன் அருண்பிரகாசுக்கு நடராஜன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகம் இருப்பதால் நடராஜன்- சந்திரகலா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தனர், வீட்டு சாவியும் இருந்துள்ளது.

உடனடியாக உறவினர்களுக்கு போன் செய்த அருண்பிரகாஷ் விவரத்தை கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டியிருந்தது, பொலிசுக்கு தகவல் அளித்த பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். கட்டிலில் கணவன்- மனைவி இருவரும் பிணமாக கிடந்தது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் மேசையின் மீது நடராஜன் எழுதி வைத்திருந்த கடிதம், சிடி மற்றும் 2 பென்ரைவ்களை பொலிசார் கைப்பற்றினர்.

முதற்கட்ட தகவலில், நடராஜன் வீட்டின் முதல் மாடியில் அவருடைய தம்பி வசித்து வருகிறார், ஆனால் வீட்டை நடராஜனின் மகன்கள் பெயருக்கு அவருடைய தந்தை எழுதி தரவே காலி செய்யுமாறு தம்பியிடம் நடராஜன் கூறியதாக தெரிகிறது.

1 கோடி கொடுத்தால் வீட்டை காலி செய்வதாகவும், இல்லையெனில் கொன்று விடுவேன் என தம்பி மிரட்டியுள்ளார்.

அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார், இதுவே இருவரின் தற்கொலை காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.