செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் கடல் பஞ்சால் உறிஞ்சப்பட்டது போன்று நீர் உறிஞ்சப்பட்ட நிலையில் காணப்படுவதாக புதிய ஆய்வொன்று உரிமை கோருகிறது.
அந்தக் கிரகத்திலுள்ள பாறைகளில் எரிமலைச் செயற்பாடுகள் காரணமாக வெளித்தள்ளப்பட்ட கனியுப்புகள் படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தக் கனியுப்புகள் பூமியிலுள்ள நீரை விடவும் 25 சதவீதத்திலும் அதிகமான நீரை உறிஞ்சி வைத்திருக்கக் கூடியவை எனவும் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பூமி விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அந்த நீர் செவ்வாயின் மேற்பரப்பில் எவ்விடங்களில் உறிஞ்சப்பட்டுள்ளது என்பது தொடர்ந்து மர்மமாகவுள்ளதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்.