இரண்டு மனைவிகளை காரோடு எரித்து கொன்றது ஏன்? திடுக்கிட வைக்கும் காரணம்!!

256

 
அம்மாவை தனது இரண்டு மனைவிகளும் சரியாக பார்த்து கொள்ளாத ஆத்திரத்தில் அவர்களை காரோடு எரித்து கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

தீபா ராம் என்ற நபருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதோடு மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவிகளுக்கு நகைகள் வாங்கி தருவதாக கூறி தீபா ராம் அவர்களை காரில் ஏற்றி சென்றுள்ளார்.

அப்போது நடுவழியில் மனைவிகளுடன் தீபா ராமுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த ராம் காரில் இருவரையும் வைத்து பூட்டிவிட்டு காரை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதில் ஒருவர் காரிலிருந்து வெளியே வர முயன்ற போது மீண்டும் உள்ளே பிடித்து தள்ளியுள்ளார், கார் முழுவதுமாக எரிந்த நிலையில் ராமின் இரண்டு மனைவிகளும் தீயில் கருகி இறந்தனர்.

சம்பவத்தையடுத்து பொலிசார் ராமை கைது செய்துள்ளனர், தனது தாயை சரியாக நடத்தாததால் மனைவிகள் மீது ராம் ஆத்திரத்தில் இருந்ததாக பொலிசார் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.