வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (23.12.2017) மாலை 6.10 மணியளவில் சாரதியின்றி பயணித்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் பேரூந்து பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா புகையிரத நிலைய வீதி இலங்கை வங்கிக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்து இன்று 6.10 மணியளவில் தானாக நகரந்து சென்று வைரவப்புளியங்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதுடன் நிற்காமல் சென்றுள்ளது. அதனையடுத்து பொதுமக்களின் உதவியுடன் தனியார் பேரூந்து தடுத்து நிறுத்தப்பட்டது.
இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















