சிறப்பாக நடைபெற்ற வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்திய சர்வதேச முதியோர் தினவிழா!!(படங்கள்)

375

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா இன்று (22.10) பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய விழாவிற்கு கூமாங்குளம் முதியோர் சங்கத் தலைவர் திரு.பிலிப்பு வரப்பிரகாசம் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் திரு.M .K.பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கலந்து கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான திரு.கிஷோர், முன்னாள் நகரபிதா எஸ்.ஐ.நாதன், பண்டாரிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி S.M.P.B.சமரகோன், திரு.கோணேஸ்வரலிங்கம் (பண்டாரிகுளம் கிராம அலுவலர்), வைத்தியர் க.இராமச்சந்திரன் (தலைவர் வவுனியா மாவட்ட முதியோர் சமாசம்), திருமதி.துசிதா புஸ்பராஜா (கிராம அலுவலர்) வைத்தியர் மு.மதிதரன் (கிசான் மெடிக்கல் சென்டர் கூமாங்குளம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய நிகழ்வில் இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவான சுப்பையா சுதர்சன் அவர்களையும் தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பல சாதனைகளை பெற்ற குமார் நவநீதன் அவர்களையும் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் தர்மலிங்கம் தர்மகடாச்சம் அவர்களையும் முதியோர் சங்க தலைவர் பிலிப்பு வரப்பிரகாசம் அவர்களையும் அரசாங்க அதிபர் கௌரவித்தார்.

மேலும் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலிருந்து 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான ஈஸ்வரன் ஜதுர்சன் ,ஜெயகுலேந்திரன் வினோஜன் ஆகியோருக்கு அரச அதிபர் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

-பிரதீபன்-

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 13 15 1617 25