வவுனியாவில் விஞ்ஞானப் பிரிவில் புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் 3A சித்திகளுடன் முதலிடம்!!

923

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

சுந்தர் சுகிர்தன் என்ற மாணவனே உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A பெறுபேற்றைப் பெற்று தேசியப் பாடசாலைகளை பின்தள்ளி வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 69வது இடத்தையும் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.