வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற 3 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைவு!!

356

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் புனர்வாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் குணசேகர தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த ஒருவருடம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த மார்க்கண்டு நேவிநாதன் யாழ்ப்பாணம், ஆறுமுகம் அருள்பிரகாஷ் கிளிநொச்சி, பெர்னாண்டோ எமில்தாஸ் முல்லைத்தீவு ஆகிய மூன்று முன்னாள் போராளிகள் இன்று அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சர்வ சமயத்தலைவர்கள், புனர்வாழ்வு ஆணையாளர் நாயக்கப் பணிமனையின் அதிகாரி கேணல் அஷாட் இசைடீன், கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டத்தின் பின் இணைப்பு அதிகாரிகள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வன்னி விமானப்படையின் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.