வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடங்களைப் பெற்று சாதனை!!

678

 
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் கலைப்பிரிவில் பிரண்ஜா ஜெகதீஸ்வரன் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தையும் , தெய்வேந்திரன் மிதிலைமாறன் 2A,C சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”5″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]