யாழில் பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து கப்பம் கோரியவர் கைது!!

445

யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனியாகவிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி வைத்து கப்பம் கோரியவர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் (27.12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் இந்த பெண்ணின் தனியாக இருந்த வேளையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இந்த நபர் பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து 5 லட்சம் கப்பம் கோரியுள்ளார்.

பெண் அலறிய போது அயலவர்கள் அங்கு சென்றுள்ளனர். அதன்போது, இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பெண் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (28) சந்தேக நபர் அச்சுவேலிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”5″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]