வவுனியா உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள்!!

607

வவுனியா உயர் தொழில் நுட்பவியல் நிறுவன இயக்குனர் பெ.இளங்குமரன் தலைமையில் ஆழிப்பேரலை நாளின் நினைவாக வறுமைகோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது ஓமந்தை வேப்பங்குளம், நொச்சிமோட்டை மற்றும் கற்குளம் கிராமங்களை சேர்ந்த பெண்களை தலைமைத்துவமாக கொண்டதும், கல்விகற்பதற்கு போதிய வசதி கொண்டிராத வறுமைகோட்டிற்கு உட்பட்ட 09 குடும்பங்களில் உள்ள 22 பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் மாணவர்களினால் வழங்கப்பட்டது.