வவுனியா பழைய பேரூந்து நிலையம் மூடப்பட்டது : பெருமளவு பொலிசார் குவிப்பு!!

471

 
வவுனியா பழைய பேருந்து நிலையம் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.தயாபரனின் உத்தரவிற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு வாகனங்கள் உட்செல்வதற்கு தடை செய்யப்பட்டு பேரூந்து நிலையத்திற்கு செல்வதற்கான பாதை மூடப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் கேட்டபோது,

வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றில் இருந்து பொதுமக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று தொடக்கம் காலவரையரையற்ற பணிபுறக்கணிப்பில் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் ஈடுபடவுள்ளன.