வவுனியா செட்டிகுளம் பாடசாலை மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை!!

666

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இம்முறையும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் பூ.பிரதிகா 2BC பெற்று மாவட்டத்தில் 2ஆம் நிலையையும், இ.கஜேந்திரன் 2BC பெற்று மாவட்டத்தில் 4ஆம் நிலையையும், எம்.எஸ்.சல்மான் 2BC பெற்று மாவட்டத்தில் 5ஆம் நிலையையும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் த.பிரதீபன் 2BC பெற்று மாவட்டத்தில் 2ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வணிகப் பிரிவில் ச.லாவன்யா 2AB பெற்று மாவட்ட மட்டத்தில் 24ஆம் நிலையையும், ந.உதயராஜ் 2AB பெற்று மாவட்டத்தில் 25ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.

பௌதிக விஞ்ஞான பிரிவில் இ.தமிழ்ச்செல்வன் A2C பெற்று மாவட்டத்தில் 29ஆம் நிலையையும், ம.அயன்ராஜ் A2S பெற்று மாவட்டத்தில் 36ஆம் நிலையையும் கலைப்பிரிவில் உ.ராகிமா ABC பெற்று மாவட்டத்தில் 54ஆம் நிலையையும் பெற்று பல்கலைகக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொறியியல் தொழிநுட்பப் பிரிவில் 100 வீதமான மாணவர்களும், உயிர்முறைமை தொழிநுட்ப பிரிவில் 74 வீதமான மாணவர்களும், வணிகப் பிரிவில் 83 வீதமான மாணவர்களும், கலைப் பிரிவில் 78 வீதமான மாணவர்களும் பௌதிக விஞ்ஞான பிரிவில் 50 வீதமான மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.