வவுனியாவில் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற இளைஞர்கள் குழுவைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!!

301

 
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக இரண்டு முச்சக்கர வண்டியில் இளைஞர் குழு ஒன்று நேற்று இரவு(01.01.2018) 9 மணியளவில் முயற்சித்தது.

இதன் போது விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் இந்த குழுவை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை வந்த குழுவினர் தாம் பயணித்த முச்சக்கர வண்டியை விட்டு தப்பி ஓடியள்ளனர்.

உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் முச்சக்கர வண்டியைக் கைப்பற்றியதுடன் தப்பிச்சென்ற இளைஞர் குழுவினரையும் தேடி வருகின்றனர்.

குறித்த முச்சக்கர வண்டியினுள் சாராய போத்தல்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் இலக்கத்தை வைத்து அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.