வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவர் கௌரவிப்பு!!

219

 
க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப்பரிவில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவன் சுந்தர் சுதர்சன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டார்.

இதன்போது புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி முதன்முறையாக மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் சுந்தர் சுதர்சன் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் குறித்த பாடசாலையிலிருந்து வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.