வவுனியாவில் ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது தாக்குதல் : சந்தேகத்தில் இருவர் கைது!!

499

 

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா தெற்கு பிரதேச சபையின் மகாறம்பைக்குளம் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது நேற்று (02.01.2018) இரவு 7 மணியளவில் இனந்தெரியாத நபர் மூவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் மேற்கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாயார் தர்மகுலசிங்கம் சத்தியதேவி ( வயது 56 ) என்பவர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்றிரவு 7 மணியளவில் மூவர் வீட்டிக்கு வந்து உங்களது மகன் எங்கே என கேட்டனர். நான் அவர் வீட்டில் இல்லை வெளியே சென்று விட்டார் என தெரிவித்தேன் . அவர் என்ன தேர்தலா கேட்கின்றார். அவனை வரச் சொல்லுங்கள் வெட்டாமல் விட மாட்டேன் என கூறி விட்டு என்னை தகாத வார்த்தையினால் பேசினார்கள்.

அப்போது அவ்வாறு கதைக்க வேண்டாமென நான் தெரிவித்த போது எனக்கு தலைக்கவசத்தினால் அடித்து விட்டு, வீதியில் உங்கள் மகளை கண்டால் வெட்டுவோம் வீட்டுடன் கொழுத்துவோம் என அச்சுறுத்திவிட்டு தப்பித்து சென்று விட்டனர் என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.