வவுனியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகள் அவதி!!

539

 
வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 9 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனிமூட்டம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.