பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்காக வரும் விமானங்களுக்கு விசேட பாதுகாப்பு..!

345

bandaபொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இலங்கை வரும் விமானங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் உலகத் தலைவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

அதேபோன்று குறித்த தலைவர்கள் பயணம் செய்யும் விமானங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவில் விமான சேவை அதிகாரசபை இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

அரச தலைவர்கள் இலங்கைக்குள் பிரவேசித்தது முதல் இந்த விசேட விமான பாதுகாப்பு கட்டமைப்பு செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிமாக புலனாய்வுப் பிரிவினரின் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.