கொழும்பில் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. மருதானை ஆசிரி வைத்தியசாலைக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீப்பற்றியமைக்கான காரணம் என்ன என இன்னமும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எரிந்த முச்சக்கர வண்டிக்கு அருகிலிருந்த அனைத்து வாகனங்களையும் அங்கிருந்து அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







