அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவது மற்றும் 3–வது ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவும், ஜெய்ப்பூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதன்படி தொடரில் ஆஸி. 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 296 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 4.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களை எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.