கொழும்பு பொலிஸ் நிலையத்தில் 17 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

219
கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்து குறித்த இளைஞன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறைக்கூடத்தில் வைத்து இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.