தங்க பிஸ்கட் கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது..!

376

goldஇலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியைச் சேர்ந்த முகமது நவாஸ் (வயது 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து நேற்று மாலை சென்னைக்குச் சென்ற விமானத்தின் பயணிகள் யாவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது முகமது நவாஸ் மீது சந்தேகம் கொண்டு சுங்க பிரிவு அதிகாரிகள் அவரையும் அவரது பயணப் பெட்டியையும் சோதனை செய்தனர்.

அதன்போது பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றின் பெறுமதி 25 லட்சம் இந்திய ரூபா என தெரியவந்துள்ளது.

முகமது நவாஸிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தான் பணத்திற்காக இந்த தங்க பிஸ்கட்களை கடத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.

எனவே அவருக்கு யார் தங்கம் கொடுத்து அனுப்பியது என சென்னை விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக ´மாலைமலர்´ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.