அதிபர், ஆசிரியர்களை தாக்கிய நால்வர் கைது..!

330

arrestகொட்டாவ – தர்மபால வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை கொட்டாவ – தர்மபால வித்தியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.