தோனியின் வீட்டின் மீது கல் வீச்சு..!

296

dhoniஇந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா பங்கேற்ற 4வது ஒரு நாள் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில், தோனியின் வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், அப்போது, அவரது குடும்பத்தினர், மைதானத்தில் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.