பொங்கல் தினத்தில் பட்டாசு கொழுத்திய சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!!

544

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக மன்னார் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் பட்டாசு கொழுத்திய 11 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசுகளை கோர்த்து அவற்றை கொழுத்திய போதும் அது வெடிக்காததன் காரணமாக அதன் அருகில் சென்று அவற்றை மீண்டும் கொழுத்த முயற்சிக்கையில் அவை திடீரென வெடித்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு சிறுவர்கள் சிறு காயமடைந்துள்ளதால் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் தேவையேற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் அந்த சிறுவனின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இரண்டு கண்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார்.