வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் கொண்டாடிய தைப்பொங்கல் விழா 2018!!

363

 
யுரேனஸ் இளைஞர் கழகம், சிறகுகள் இளைஞர் அமைப்பு மற்றும் யுரேனஸ் விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் விழா நேற்று (14.01.2018) காலை 10.30 மணிக்கு சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய முன்றலில் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மாணிக்கம் ஜெகன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆலய பிரதம குரு சண்முகநாத குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்

இத் தைப்பொங்கல் விழா எம் இனத்தை நிலை நிறுத்த போதையில் இருந்து விடுபடுவோம். எனும் நோக்கோடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. மாற்றத்தை தமிழர் திருநாளும் தமிழின் முதல் நாளும் ஆன தைப்பொங்கல் தினத்தில் இருந்து ஆரம்பிக்கின்றோம் என்று தனது உரையில் கணேசலிங்கம் சிம்சுபன் குறிப்பிட்டத்தோடு சிகரட் பாவனையில் இருந்து விடுபடுவோம் என்ற துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறகுகள் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்கள் மூலமாக சேர்க்கப்பட்ட நிதியில் வறிய மாணவர்களுக்கு அப்பியசாக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.