கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை வடமாகாண சபை ஊக்குவிக்க வேண்டும் : சு.வரதகுமார்!!

541

 
கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களினை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை வடக்கு மாகாணசபை முன்னெடுக்கவேண்டும் என வவுனியா நகரக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான உலக உணவுத்திட்ட இணைப்பு அதிகாரி சு.வரதகுமார் தெரிவித்தார்.

தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா வவுனியா கல்நாட்டினகுளம் பாடசாலையில் பாடசாலை அதிபர் கே.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது இதன்போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் தொகை குறைவு என்ற காரணங்களை காட்டி நாங்கள் அவர்களுக்கான பௌதீக வளத்தேவைகளை வழங்குவதில் பின்னடித்துவிடமுடியாது.

கிராமிய பண்புகளைக்கொண்ட கிராமப்புறப் பாடசாலைகளின் வளர்ச்சியினால் கிராமியப் பண்புகளும் கிராமிய விழுமியங்களும் கட்டியெழுப்பபடுகிறது.

தற்காலத்தில் ஒரு சில கிராமப்புற பாடசாலைகளில் கிராமிய கலைவிழாக்கள் அழகாக கொண்டாடப்படுகிறன. பாரம்பரிய விளையாட்டுக்கள் கொண்டாடப்படுகிறன. கிராமிய கலாச்சாரத்தை கட்டியெழுப்ப வடக்குமாகாணசபை முன்வரவேண்டும்.

கிராமிய விழாக்கள், கிராமிய விளையாட்டுக்களை கிராமப்புற பாடசாலைகளிருந்து வளர்த்தெடுக்கவேண்டும். கிராமப்புறப் பாடசாலைகளில் கிராமப்புற பாடசாலைகளில் கற்பதை ஊக்கிவிக்ககூடிய வகையில் கிராமப்புற பாடசாலை மாணவர்களை ஊக்கிவிக்கும் கல்விச்செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

அவர்களிற்கான பாடசாலை பௌதீக வளத்தேவைகள், உள ஆற்றுப்படுத்தல் தேவைகள், உடற்கல்விச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதன்மூலம் கிராமப்புறத்தில் பல கல்வியலாளர்கள் உருவாகுவார்கள். இதன் ஊடாக கிராமப்புறங்கள் வளர்ச்சியடையும்.

கிராமப்புறங்களில் வீடுகளில் அவர்களின் ஆக்கச்செயற்பாட்டை முன்னெடுக்கும் போட்டிகளுக்கு பரிசில் வழங்கும் செயற்றிட்டத்தை வடக்குமாகாணசபை முன்னெடுக்கவேண்டும்.

வெகுவிரைவில் கிராமியப் பண்பாட்டின் அனுகூலங்களை புரிந்து கொண்டு நகர்ப்புறத்தினரும் கிராமியப்பண்புகளை நோக்கி நகர்வார்கள். இதன் மூலம் நல்லதொரு எதிர்கால சமூகம் கட்டியெழுப்பப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் பாடசாலை ஆசியர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.