ஆலயத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டுப் பெண்ணின் செயல்!!

558

 

தமிழர் திருவிழாவான பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. உழவரின் உழைப்பும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் உழைப்பும் சேர்ந்ததே, நாம் உண்ணும் உணவு.
 அதன் காரணமாகவே மாடுகளை வழிபடும் விதமாக, நன்றி மறவாமல் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும், மாடுகளை சுத்தம் செய்து, மாலை போட்டு, பொங்கல் பொங்கி மாடுகளை கடவுளாக வழிபடுவார்கள்.

தமிழர் திருவிழாக்களை வெளிநாட்டவர்கள் விரும்புவதுடன், அவர்களும் கொண்டாடுவதற்கு விருப்பப்படுவார்கள். தமிழர் முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு தமிழர் கலாச்சாரமும், விழாக்களும் அவர்களுக்கு பிடித்துபோகின்றது.

அந்த வகையின் இன்று மாட்டுப்பொங்கல் தினத்தன்று கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த வெளிநாட்டுப் பெண்ணின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த பெண் குட்டையாக ஆடை அணிந்திருந்தாலும், ஆலயத்திற்குள் வரும் போது தனது சால்வையால் உடலை முழுவதும் மூடியவாறு வந்திருந்தார்.

அத்துடன், மாடுகளுக்கு அருகில் செல்ல பயப்படும் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் குறித்த வெளிநாட்டுப்பெண் அந்த மாடுகளுக்கு அருகில் சென்று உணவு கொடுத்து இரு கரம் கூப்பி கும்பிட்டுள்ளார்.