எருமைக் கன்றை விழுங்கிய மலைப்பாம்பு : அச்சத்தில் மக்கள்!!

669

கஹந்தமோதர, தில்லவடவன பிரதேசத்தில் பாரிய மலைப்பாம்பு ஒன்று எருமை கன்று ஒன்றை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எருமைக் கன்றை விழுங்கி மிகவும் சிரமத்தில் இருந்த குறித்த மலைப்பாம்பை கண்டு பிரதேசவாசிகள் வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் பாம்பை பிடித்து புந்தல தேசிய பூங்காவில் விடுவித்துள்ளனர்.

குறித்த மலைப்பாம்பு ஏனைய கால்நடைகளை விழுங்கக்கூடும் என பிரதேசவாசிகள் தெரிவித்ததுடன், அச்சம் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தே குறித்த மலைப்பாம்பை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்ததாக கலமெடிய வனவிலங்கு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.