ஜனாதிபதியிடம் ஓடிவந்த சிறுமி : அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம்!!

468

உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி, ஒரு சிறுமியுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அகலவத்தை நகரில் நேற்று இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பல முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு சிறுமி ஜனாதிபதியிடம் வருவதற்கு ஆசைப்பட்டு முயற்சி செய்துள்ளார்.

இதை அவதானித்த ஜனாதிபதி குறித்த சிறுமியை தனக்கு அருகில் அழைத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஜனாதிபதியுடன் உரையாடியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்கு முன்னரும் ஜனாதிபதி தான் செல்லும் கூட்டங்களிலோ அல்லது வீதியிலோ, தன்னை சந்திக்க வரும் சிறுவர் சிறுமிகளையோ கவனிக்காமல் விட்டதில்லை. அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து, அவர்களிடம் கலந்துரையாடி அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.