மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பகுதியிலுள்ள, உமாமில் வீதியைச் சேர்ந்த கந்தலிங்கம் ரேஸ்மியா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் 15 வயதான குறித்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






