கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

1499

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பன்னங்கண்டி வாய்க்கால் பகுதியிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் காணப்பட்ட இடத்தில், மோட்டார் சைக்கிளொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

22 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.