முள்ளிவாய்க்காலில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வலைஞர்மடப் பகுதி கடற்கரையில் இரண்டு பெரிய கடல்பந்துகள் இன்று கரையொதுங்கி உள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோடர் படகுகளில் சட்டவிரோத மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோர் கடல்பந்து வளைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த கடல்பந்து வளைகள் சுமார் 25 கிலோ கிராம் எடையுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சட்டவிரோத மீன்பிடித்தொழில் அதிகரித்துள்ள காரணத்தினால் அப்பகுதி மீனவர்களின் கடற்தொழில் பாதிப்படைந்துள்ளதாக வலைஞர்மடம் மீன்பிடி சங்கத்தின் தலைவர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை மேற்கொண்ட வெளிமாவட்ட மீனவர்களின் போயா காவி மிதப்பு என்று அழைக்கப்படும் கடற்பந்துகளே இன்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







