மட்டக்களப்பில் காணாமல் போன தாய் கொழும்பில் மீட்பு!!

750

ஏறாவூர், புன்னைக்குடா பிரதேசத்தில் வைத்து கடந்த 11ஆம் திகதி காணாமல் போயிருந்த 60 வயதுடைய பெண் கொழும்பில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தங்கவேல் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் காணாமல் போனமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் உடனடியாக அவரை கொழும்பில் ஒரு வீட்டில் வைத்து பராமரித்து வருவதாக அவ்வீட்டார் தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்வீட்டார் வழங்கிய தகவலுக்கமையவே தனது தாயைக் கண்டு பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புன்னைக்குடா வீதியை அண்டி வாழும் 60 வயதுடைய, 5 பிள்ளைகளின் தாயான சுமத்திரா தங்கவேல் காணாமல் போயுள்ளதாக அவரது மகனால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.