நீதிமன்ற தடை உத்தரவை மதிக்காத பல்கலைக்கழக மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை..!

286

ajithநீதிமன்ற உத்தரவை மதிக்காது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் குறித்து நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதென மாணவர்களுக்கு பொலிஸார் அறிவித்த பின்னரும் அவர்கள் பேரணி சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சவப்பெட்டி மற்றும் மலர் வளையத்துடன் பேரணி நடத்தினர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரகள் ஒழுங்கு செய்திருந்த பலாங்கொட வரையிலான இந்த பேரணிக்கு பலாங்கொட மாவட்ட நீதவான் லலித் கன்னங்கர நேற்று தடை விதித்திருந்தார்.

தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால் கொழும்பு – பதுளை வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இலவச கல்விக்கு இறுதி ஊர்வலம் என்ற வாசகங்களை ஏந்திய மாணவர்கள் சவப்பெட்டி மற்றும் மலர் வளையங்களுடன் பேரணியில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.