சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் ஜெயிக்க முடியாது என்று கோடம்பாக்கத்தில் இருந்து வந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்தவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் உலாவந்த இவரை சினிமாவுக்கு கொண்டு வந்த பெருமை ஐஸ்வர்யா தனுஷைதான் சாரும். தான் இயக்கிய 3 படத்தில் தனுஷின் நண்பராக அவர்தான் அறிமுகம் செய்தார்.
ஆனால், அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே, தான் இயக்கிய மெரினா படத்துக்கு சிவகார்த்திகேயனை நாயகனாக்கினார் பாண்டிராஜ்.
இப்படி ஆரம்பித்த அவரது பயணம், எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களுக்குப்பிறகு வெற்றிப் பயணமாகியிருக்கிறது.
அவர் படங்கள் தாறுமாறாக வசூலிப்பதால், அவரது மார்க்கெட்டுடன் சேர்ந்து சம்பளமும் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், சமீபத்தில் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் அப்பாவான சந்தோசத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை, மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவரது நண்பர்கள் சிலர், முதல் குழந்தை பெண்ணாக பிறப்பது பெரிய அதிர்ஷ்டம் என்று சொல்லி அவரை சந்தோசப்படுத்தி வருகிறார்கள்.
இதனால் இதுவரை தான் நடித்த படங்களில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அதிகமாக வசூலித்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த சிவகார்த்திகேயன், இப்போது மகள் பிறந்ததையும் சேர்த்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கிறார்.