மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

546
மகன் ஒருவரின் தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வீரவில பொலிஸ் பிரிவை சேர்ந்த கோனகமுவ சாலியபுர பிரதேசத்தை சேர்ந்த நந்தசேன என்ற 58 வதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தந்தையை தாக்கி விட்டு மறைந்திருக்கும் மகனை கைது செய்வதற்கு வீரவில பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தாக்குதல் மேற்கொண்ட மகன் மனநோயினால் பாதிக்கப்பட்ட என தெரிவிக்கப்படுகிறது.